Last Updated : 20 Nov, 2014 09:07 PM

 

Published : 20 Nov 2014 09:07 PM
Last Updated : 20 Nov 2014 09:07 PM

இந்தியாவில் சினிமா ஒரு மாற்று மதம்: ஜேட்லி

'இந்தியாவில் சினிமா ஒரு மாற்று மதமாக உள்ளது' என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

கோவாவில் சர்வதேசத் திரைப்பட விழா நேற்று துவங்கியது. இதைத் துவக்கி வைத்த அமைச்சர் அருண் ஜேட்லி பேசியதாவது:

"இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதமாகக் கருதப்படுகிறது. எனில், சினிமா மாற்று மதமாகக் கருதப்படுகிறது. ஓர் ஆண்டுக்கு சுமார் 1,000க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இங்கு உருவாகின்றன. உலகளவில் இங்குதான் அதிகளவில் திரைப்படங்கள் உருவாகின்றன.

குழந்தைகளும், இளைஞர்களும் முறையான கல்வி அமைப்பின் மூலம் கற்றுக்கொள்வதை விடவும், சினிமா மூலமாகத்தான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார்கள்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x