Published : 13 Mar 2014 01:54 PM
Last Updated : 13 Mar 2014 01:54 PM
வருகின்ற மக்களவை தேர்தலில் கர்நாடக மாநிலம் சிக்மகளூர்-உடுப்பி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட்(சிபிஐ) கட்சியின் சார்பாக தமிழரான விஜயகுமார் வேட்பாளராக அறிவிக்கப் பட்டிருக்கிறார்.
இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ள் கர்நாடக தமிழ் அமைப்புகள், அவருடைய வெற்றிக்கு பாடுபட போவதா கவும் தெரிவித்துள்ளன. தமிழகத் திற்கு அடுத்ததாக அண்டை மாநிலமான கர்நாடகாவில் அதிக அளவில் தமிழர்கள் வசிக்கிறார்கள். கர்நாடகா முழுவதும் கிட்டத்தட்ட ஒரு கோடி தமிழர்கள் வசிப்பதாக இங்குள்ள தமிழ் அமைப்புகள் தெரிவிக்கின்றன.
தமிழ் வாக்காளர்கள் கணிசமாக இருந்த போதிலும் தமிழர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில்லை. இந்நிலையில் வருகின்ற மக்களவை தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக களமிறங்கும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் சிக்மகளூர்-உடுப்பி தொகுதியின் வேட்பாளராக தமிழரான விஜயகுமார் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்
வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் விஜயகுமார் `தி இந்து'விடம் பேசுகையில், “என்னுடைய தாத்தா காலத்திலே நாங்கள் சிக்மகளூருக்கு குடி பெயர்ந்துவிட்டோம். நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே சிக்மகளூரில்தான். படிப்பை முடித்தவுடன் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து தொழிற்சங்க பணிகளில் ஈடுபட்டேன். கடந்த 20 ஆண்டுக ளுக்கும் மேலாக சாதி, மதம், மொழி, கட்சி பேதமின்றி அனைத்து மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி இருக்கிறேன்''என்றார்.
வெற்றி வாய்ப்பு?
சிக்மகளூர்-உடுப்பி தொகுதி யில் இரண்டரை லட்சத்திற்கு அதிகமான தமிழர்கள் வாழ்கிறார்கள். இத்தொகுதியில் காபி, ரப்பர் தோட்டங்களில் தொழிற்சங்க செயற்பாடு களும், கட்டுமான தொழிலாளர் உள்ளிட்ட பல்வேறு தரப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட்டிருக்கிறது.
காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ஜெயபிரகாஷ் ஹெக்டே அறிவிக்கப்பட்டிருக்கிறார். பா.ஜ.க. சார்பாக முன்னாள் அமைச்சர் ஷோபா கரந்தலாஜே வேட்பாளராக அறிவிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. இரு வருமே சிக்மகளூர்-உடுப்பியை சேராதவர்கள். எனவே மண்ணின் மைந்தரான விஜயகுமாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT