Published : 12 Jun 2017 09:19 AM
Last Updated : 12 Jun 2017 09:19 AM

உ.பி., மகாராஷ்டிரா விபத்துகளில் 19 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் நேற்று அதிகாலை நேரிட்ட விபத்தில் 10 பேரும் மகாராஷ்டிராவில் ஏற்பட்ட விபத்தில் 9 பேரும் உயிரிழந்தனர்.

உத்தரபிரதேசம் ரேபரேலி அருகேயுள்ள சுபாஷ் நகரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மெகந்திபூர் பாலாஜி கோயிலுக்கு புனித யாத்திரை புறப்பட்டனர். அந்த குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர், கார் ஓட்டுநர் என மொத்தம் 10 பேர் ஒரே காரில் சென்றனர்.

அவர்கள் சென்ற கார் நேற்று அதிகாலை மதுரா - ஜனம்பட்டி என்ற இடத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கால்வாயில் பாய்ந்தது. இதில் 10 பேரும் உயிரிழந்தனர். அவர்களில் 5 பேர் பெண்கள்.

மகாராஷ்டிரா விபத்து

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை யில் இருந்து லத்தூருக்கு தனி யார் பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து நேற்று அதிகாலை பீட் மாவட்டம் அம்போரா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந் தது. இதில் 9 பேர் பலியாகினர். 12 பேர் பலத்த காயமடைந்தனர்.

முதல்கட்ட போலீஸ் விசார ணையில், ஓட்டுநர் அதிவேகமாக பேருந்தை ஓட்டியதே விபத் துக்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x