Last Updated : 21 Jan, 2017 10:31 AM

 

Published : 21 Jan 2017 10:31 AM
Last Updated : 21 Jan 2017 10:31 AM

பல்கலைக்கழகங்களில் கருத்து சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கருத்து

பல்கலைக்கழகங்களில் கருத்து சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் நிலவுவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

கொல்கத்தாவின் பிரசிடென்சி பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மன்மோகன் சிங் பேசும்போது, “இந்தியப் பல்கலைக்கழகங்களில் சுதந்திரமான சிந்தனை மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு தற் போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது. பல்கலைக் கழக நியமனங்களில் அரசியல் தலையீடு காணப்படுகிறது. இது மிகவும் குறுக்கிய நோக்கம் கொண்டதாகும்.

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மாணவர் சமுதாயத்தின் கருத்து சுதந்திரத்தில் குறுக்கிட முயன்றது மிகுந்த கவலை அளிக்கிறது.

அமைதி வழியில் போராடும் மாணவர்களை ஒடுக்க முயற்சிப்பது கல்விக்கு எதிரானது. மேலும் இது ஜனநாயக விரோதமானது. பல் கலைக்கழகங்களின் சுயாட்சியை பாதுகாக்க இயன்ற அனைத்து முயற்சிகளையும் நாம் எடுக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x