Published : 20 Nov 2014 08:32 AM
Last Updated : 20 Nov 2014 08:32 AM

கொலை வழக்கில் சிக்கிய சாமியார் ராம்பால் கைது: நீதிமன்றத்தில் இன்று ஆஜர்

ஹரியாணாவில் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சாமியார் ராம்பால் (63) ஹரியாணா போலீஸாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.

கடந்த 2 நாட்களாக பல்லாயிரக் கணக்கான ஆதரவாளர்களை மனித கேடயமாக பயன்படுத்திக் கொண்டு போலீஸில் சிக்காமல் ஆசிரமத்தில் தங்கியிருந்த அவரை போலீஸார் கைது செய்து ஆம்புலன்ஸ் மூலம் சண்டீகருக்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணை நீதிமன்றத்தில் ராம்பால் இன்று ஆஜர்படுத்தப்படுவார் என தகவல்கள் கூறுகின்றன.

முன்னதாக, ஹரியாணா முதல்வர் மனோகர்லால் கத்தாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இதுதொடர் பாக ஆலோசனை நடத்தினார். அப்போது, ராம்பால் விவகாரம் குறித்து ராஜ்நாத் சிங்கிடம் விவரித் துள்ளார். அப்போது, போலீஸாருக் கும் ராம்பால் ஆதரவாளர்களுக்கும் இடையே நீடித்து வரும் பிரச்சினையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருமாறு வலியுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x