Published : 21 Nov 2014 10:07 AM
Last Updated : 21 Nov 2014 10:07 AM
ஹைதராபாத்தில் உள்ள ஆந்திர அரசு ஊழியர் இல்லத்துக்கு தெலங்கானா அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று பூட்டு போட்டனர்.
ஹைதராபாத்தில் கன்ஃபவுண் டரி பகுதியில் ஆந்திரா அரசு ஊழியர் இல்லம் உள்ளது. இந்த இடம் தனியாருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.
ஆனால், மாநிலம் பிரிக்கப்பட்ட பின்னர் இது தெலங்கானா அரசு ஊழி யருக்குத்தான் சொந்தம் என தெலங் கானா அரசு ஊழியர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று தெலங்கானா அரசு ஊழியர் சங்கத்தினர் சிலர் இந்த அலுவலகத்துக்கு பூட்டு போட்டனர். இதனால் ஆந்திரா, தெலங்கானா அரசு ஊழியர் சங்கத்தினரிடையே புதிய மோதல் உருவாகி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT