Published : 10 Nov 2014 10:02 AM
Last Updated : 10 Nov 2014 10:02 AM
தமிழுக்காக குரல் கொடுத்து வரும் உத்தராகண்ட் பாஜக எம்.பி தருண் விஜய் இன்று மாலை சென்னை வருகிறார். கவிஞர் வைரமுத்து நடத்தும் பாராட்டு விழாவில் நாளை அவர் பங்கேற்கவுள்ளார்.
பாராளுமன்றத்தில் தமிழுக்காக குரல் கொடுத்து வரும் உத்தரா கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த எம்பி யான தருண் விஜய்க்கு கவிஞர் வைரமுத்துவின் வெற்றித்தமிழர் பேரவை சென்னையில் நாளை பாராட்டு விழா நடத்துகிறது. இந்த பாராட்டு விழாவில் பங்கேற் பதற்காக தருண் விஜய் இன்று மாலை சென்னை வருகிறார்.
தனது தமிழக வருகை குறித்து ‘தி இந்து’ விடம் தருண் விஜய் கூறும்போது, “பாரம்பரியமும் கலாச்சாரமும் மிக்க தமிழகத்துக்கு வருவதை பெருமையாக கருது கிறேன். தமிழர்களை சந்திக்க ஆவலாக உள்ளது. தமிழகத்தில் நடக்கும் பாராட்டு விழா எனது வாழ்வில் மறக்க முடியாத ஒன்று’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT