Published : 14 May 2015 03:48 PM
Last Updated : 14 May 2015 03:48 PM
ஸ்ரீநகரின் ஹும்ஹாமா பகுதிக்கு துணை ராணுவப் படை வீரராக பொறுப்பு பெற்ற தன் மகனுக்கு பெருமிதத்துடன் முத்தமிடும் தாய். | படம்: நிஸார் அகமது
மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எஃப்.) பிரிவுக்கு க்கு தேர்வான 341 இளம் வீரர்களுக்கான நியமனம் வழங்கு நிகழ்ச்சி வியாழக்கிழமை ஜம்மு - காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் நடைபெற்றது.
மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு தேர்வான 341 பேரும் உடல் தகுதி, துப்பாக்கிச் சுடுதல், ஆயுதங்களை பயன்படுத்தும் உத்தி, கமாண்டோ நடவடிக்கைகள் மற்றும் அசாதாரண நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் விதம் எனப் பல்வேறு பயிற்சிகளை கடந்த 44 வாரங்களில் முடித்துக் கொண்டு அதிகாரப்பூர்வமாக நியமனம் பெற்றனர்.
முழுமையான புகைப்படத் தொகுப்புக்கு - >சி.ஆர்.பி.எஃப். பிரிவில் புறப்பட்ட புதிய படை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT