Published : 04 Jun 2016 08:18 AM
Last Updated : 04 Jun 2016 08:18 AM
பிரதமர் நரேந்திர மோடி, ஆப்கானிஸ்தான், கத்தார், சுவிட்சர்லாந்து, மெக்ஸிகோ, அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தை இன்று தொடங்கவுள்ளார். வர்த்தகத்தை விரிவு செய்தல், எரிசக்தி, பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்டவை இப்பயணத்தின் முக்கிய நோக்கமாக இருக் கும்.
இப்பயணத்தில் 48 நாடுகள் அங்கம் வகிக்கும் அணு மூலப்பொருட்கள் விநியோகக் கூட்டமைப்பில் இணைவதற்காக மெக்ஸிகோ மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளின் ஆதரவை மோடி கோரவுள்ளார். ஒபாமாவுடனான சந்திப்பின்போதும் இது தொடர்பாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
முதலில் ஆப்கன் பயணம் செய்யும் பிரதமர், இந்தியா உதவியுடன் கட்டப்பட்டுள்ள ஆப்கன்-இந்தியா நட்புறவு அணையான சல்மா அணையை அதிபர் அஷ்ரப் கனியுடன் இணைந்து திறந்து வைக்கிறார்.
பின்னர் அங்கிருந்து எண்ணெய் வளம் மிக்க கத்தார் செல்கிறார். பின் அங்கிருந்து இரண்டு நாள் பயணமாக சுவிட்சர்லாந்து செல்கிறார். “சுவிட்சர்லாந்து தலைவர்களுடனான சந்திப்பில், சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்புப் பண விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்படும்” என வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT