Published : 08 Jan 2014 11:27 AM
Last Updated : 08 Jan 2014 11:27 AM

மகாராஷ்டிரா ரயில் விபத்து: ரூ.5 லட்சம் இழப்பீடு

மகாராஷ்டிரா ரயில் விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என ரயில்வே அமைச்சர் மல்லிகா கார்கே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் மும்பை-டேராடூன் ரயிலில் தீ பிடித்தது. இந்த விபத்தில் 9 பேர் பலியாகினர்.

பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும், பெரிய அளவில் தீக்காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணத் தொகையும், சிறிய காயங்கள் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணத் தொகையும் அளிக்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x