Published : 01 Oct 2014 11:21 AM
Last Updated : 01 Oct 2014 11:21 AM

உ.பி.யில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 3 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாபடர் ஒன்று விபத்துக்குள்ளானதில், இரண்டு விமானிகள் உள்பட 3 பேர் பலியாகினர்.

உத்தரப் பிரதேசத்தில் ராணுவ கண்டோன்மன்ட் பகுதியில் இருந்து புறப்பட்ட சில மணித் துளிகளில் ராணுவ ஹெலிகாபடர் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில், இரண்டு விமானிகள் உள்பட 3 பேர் பலியாகினர்.

விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாகவும், அப்போது இயந்திரக் கோளாறு ஏற்பட்ட காரணத்தால், ஹெலிகாப்டரில் தீ பற்றி விழுந்து நொறுங்கியதாகவும் ராணுவ செய்தித் தொடர்பாளார் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் 2 விமானிகள், 1 ராணுவ இன்ஜினீயர் உள்பட 3 பேர் பலியானதையும் அவர் உறுதி செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x