Last Updated : 11 Oct, 2014 10:20 AM

 

Published : 11 Oct 2014 10:20 AM
Last Updated : 11 Oct 2014 10:20 AM

குடியரசுத் தலைவர் நார்வே பயணம்

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நாளை நார்வே, பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

இந்த 6 நாள் பயணத்தில் பின்லாந்தின் ஆர்க்டிக் பகுதியில் உள்ள கிராமத்துக்கு பிரணாப் செல்ல இருக்கிறார். ஆர்க்டிக் பகுதிக்கு செல்லும் முதல் இந்திய தலைவர் பிரணாப்தான். அதேபோல நார்வே செல்லும் முதல் இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிதான்.

ஆர்க்டிக் துருவ பகுதியில் தங்கி பணியாற்றும் இந்திய விஞ்ஞானிகளை அவர் சந்தித்துப் பேச இருக்கிறார். மேலும் அங்குள்ள இந்திய மாணவர்கள் மத்தியிலும் அவர் உரையாற்றுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x