Published : 02 Jul 2016 11:15 AM
Last Updated : 02 Jul 2016 11:15 AM

7 டன் செம்மரம் பறிமுதல் : சென்னையை சேர்ந்த 2 பேர் கைது

திருப்பதி வனப்பகுதியில் இருந்து செம்மரம் கடத்தியதாக சென்னையை சேர்ந்த 2 பேரை திருப்பதி போலீஸார் நேற்று கைது செய்தனர். இவர்களிடமிருந்து 7 டன் செம்மரங்களை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து திருப்பதி எஸ்.பி விஜயலட்சுமி கூறும்போது, “திருப்பதி சேஷாசலம் வனப்பகுதி யில் இருந்து செம்மரங்களை வெட்டி கடத்தி விற்கும் சென்னையை சேர்ந்த விஷால், ரமேஷ் ஆகிய இருவரை சிட்கோ பகுதியில் கைது செய்தோம். இவர்களிடமிருந்து 7 டன் செம்மரங்கள் (237 மரங்கள்) 2 எலக்ட்ரானிக் எடை இயந்திரங்கள், 2 மரம் அறுக்கும் நவீன இயந்திரங்கள் போன்றவற்றையும் பறிமுதல் செய்துள்ளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x