Published : 02 Jul 2016 11:15 AM
Last Updated : 02 Jul 2016 11:15 AM
திருப்பதி வனப்பகுதியில் இருந்து செம்மரம் கடத்தியதாக சென்னையை சேர்ந்த 2 பேரை திருப்பதி போலீஸார் நேற்று கைது செய்தனர். இவர்களிடமிருந்து 7 டன் செம்மரங்களை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து திருப்பதி எஸ்.பி விஜயலட்சுமி கூறும்போது, “திருப்பதி சேஷாசலம் வனப்பகுதி யில் இருந்து செம்மரங்களை வெட்டி கடத்தி விற்கும் சென்னையை சேர்ந்த விஷால், ரமேஷ் ஆகிய இருவரை சிட்கோ பகுதியில் கைது செய்தோம். இவர்களிடமிருந்து 7 டன் செம்மரங்கள் (237 மரங்கள்) 2 எலக்ட்ரானிக் எடை இயந்திரங்கள், 2 மரம் அறுக்கும் நவீன இயந்திரங்கள் போன்றவற்றையும் பறிமுதல் செய்துள்ளோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT