Published : 18 Jan 2017 09:16 AM
Last Updated : 18 Jan 2017 09:16 AM
உத்தரப் பிரதேச மாநிலம், அமேதி மாவட்டத்தில் மத்திய அமைச்சர் காயத்ரி பிரசாத் பிரஜாபதியின் ஆதரவாளர் வீட்டில் இருந்து 31 சைக்கிள்கள், 489 துணிப் பொட்டலங்களை போலீஸார் நேற்று கைப்பறினர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “அமேதி மாவட்டத்தின் கேவலாபூரில் வசிக்கும் ஹரீஷ் யாதவ் என்பவரின் வீட்டிலிருந்து 31 சைக்கிள்கள், 489 துணிப் பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன. மாநில தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இப்பொருட்களை பறிமுதல் செய்தோம்” என்றார்.
ஹரீஷ் யாதவ், மத்திய கேபினட் அமைச்சர் காயத்ரி பிரசாத் பிரஜாபதி மற்றும் உள்ளூர் எம்எல்ஏவின் தீவிர ஆதரவாளர் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக மத்திய அமைச்சரின் கருத்தை அறிவதற்காக பிடிஐ செய்தியாளர் அவரைத் தொடர்புகொள்ள முயன்றார். ஆனால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT