Last Updated : 13 Oct, 2014 10:56 AM

 

Published : 13 Oct 2014 10:56 AM
Last Updated : 13 Oct 2014 10:56 AM

சுனந்தா புஷ்கர் சொத்துகளை கைப்பற்றவில்லை: உயர் நீதிமன்றத்தில் சசி தரூர் விளக்கம்

சுனந்தா புஷ்கரின் சொத்துகள் எதையும் எடுத்துக்கொள்ளவில்லை என அவரது கணவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் கேரள உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் சசி தரூர். இதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தபோது, பிரமாண பத்திரத்தில் தனது மனைவி சுனந்தாவின் சொத்து பற்றிய விவரங்களை தெரிவிக்கவில்லை என கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பதில் அளிக்குமாறு உத்தரவிட்டதையடுத்து, சசி தரூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், “எனது முன்னாள் மனைவி சுனந்தாவின் அசையும், அசையா சொத்துகளை தனியாகவோ, எனது மகனுடனோ அல்லது பிற உறவினருடன் சேர்ந்தோ நான் எடுத்துக்கொள்ளவில்லை. மேலும் கனடா குடியுரிமை பெற்றவர் என்பதால் சுனந்தாவின் சொத்துகள் வாரிசுரிமை சட்டத்தின் கீழ் வராது என்பதால் அதுபற்றி வேட்பு மனுவில் தெரிவிக்கவில்லை” என கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x