Published : 11 Jul 2016 11:21 AM
Last Updated : 11 Jul 2016 11:21 AM
விமான கட்டணங்களுக்கு கட்டுப் பாடு விதிக்க உத்தரவிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்கறிஞர் அமித் சஹானி என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: தனியார் விமான நிறுவனங்கள் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கின்றன. இதே தடுக்க தேசிய அளவில் விதிகள் வகுக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட உச்ச வரம்பை தாண்டி கட்டணம் வசூலிக்கக்கூடாது. அதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT