Published : 03 Jan 2017 09:02 AM
Last Updated : 03 Jan 2017 09:02 AM
2017 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் டிசம்பர் 31-ம் தேதி இரவு 1 மணி வரை பார்கள் நடத்த அரசு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் மதுபான கடைகள் இரவு 12 மணி வரை திறந்திருக்கலாமெனவும் அரசு அனுமதி வழங்கியது.
இதனால் மதுப்பிரியர்கள் மதுபானங்களுடன் விடிய, விடிய புத்தாண்டு கொண்டாட்டத்தை வெகுஜோராக நடத்தினர். டிசம்பர் 31-ம் தேதி இரவு முதல் மறுநாள் ஜனவரி 1-ம் தேதி இரவு வரை தெலங்கானா மாநிலத்தில் 24 மணி நேரத்தில் ரூ.74 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
இதில் ஹைதராபாத்தில் மட்டும் ரூ.25 கோடிக்கு மது விற் பனை நடந்துள்ளது. இதேபோன்று ஆந்திராவில் 24 மணி நேரத்தில் ரூ.100 கோடியை மிஞ்சியுள்ளது மது விற்பனை.
வரும் பொங்கல் பண்டிகைக் கும் மது விற்பனையை அதிகரிக்க வேண்டுமென அரசு ரகசிய உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT