Published : 31 Jul 2016 11:46 AM
Last Updated : 31 Jul 2016 11:46 AM
உத்தராகண்ட்டில் முதல்வர் ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்தது. அப்போது காங்கிரஸ் எம்எல்ஏ ஹரக் சிங் ராவத் (56) தலைமையில் கட்சி எம்எல்ஏ.க்கள் சிலர் போர்க் கொடி தூக்கினர். இதனால் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஹரக் சிங். ஆனால், உத்தராகண்டில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ.க்கள் சிலர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஹரக் சிங் ராவத் தலைமையில் பாஜக.வில் சேர்ந்தனர். இந்நிலையில், பலாத்கார குற்றத்தின் கீழ் ஹரக் சிங் ராவத் மீது டெல்லி போலீஸார் நேற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
டெல்லியில் ‘கிரீன் பார்க்’ பகுதி யில் உள்ள தனது இல்லத்துக்கு ஹரக் சிங் தன்னை வெள்ளிக் கிழமை அழைத்ததாகவும், அப்போது அவர் பலாத்காரம் செய்ததாகவும் டெல்லி போலீஸில் பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் ஹரக் சிங் மீது போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
தற்போது புகார் கொடுத்துள்ள பெண், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அளித்த புகாரில் தன் னுடைய மகனுக்கு ஹரக் சிங்தான் தந்தை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது உத்தரா கண்ட் காங்கிரஸ் அரசில் அமைச் சராக இருந்தார் ஹரக் சிங். அதனால் அமைச்சர் பதவியை அவர் 2003-ம் ஆண்டு ராஜி னாமா செய்தார். பின்னர் சிபிஐ விசாரணையில் அவர் விடுவிக்கப் பட்டார். இந்நிலையில், மீண்டும் பாலியல் பலாத்கார புகாரில் சிக்கியுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தன்னை மானபங்கப்படுத்தியதாக ஹரக் சிங் மீது மற்றொரு பெண் போலீஸில் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT