Last Updated : 18 Jun, 2016 07:52 AM

 

Published : 18 Jun 2016 07:52 AM
Last Updated : 18 Jun 2016 07:52 AM

ஆப்பிரிக்க நாடுகளில் தானியங்கள் பயிரிட மத்திய அரசு திட்டம்

மொசாம்பிக், தான்சானியா, மலாவி உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடு களில் ஒப்பந்தப் பண்ணையம் மூலம் உணவு தானியங்களை பயிரிடுவதற்கான சாத்தியக்கூறு களை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.

உள்நாட்டில் ஏற்படும் உணவு தானிய பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு ஆகிய பிரச் சினைக்கு, இத்திட்டம் நீண்டகால தீர்வாக அமையும் என எதிர்பார்க் கப்படுகிறது. இதற்காக, மத்திய அரசின் அதிகாரிகள் குழு விரைவில் மொசாம்பிக் செல்ல இருப்பதாக, மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நாட்டின் உணவு தானிய தேவை, 2.3 முதல் 2.4 கோடி டன்களாக இருக்கும் நிலையில், 2015-16-ம் ஆண்டில் உற்பத்தி அளவு, 1.7 கோடி டன் என்ற அளவிலேயே இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x