Published : 14 Dec 2013 12:39 PM
Last Updated : 14 Dec 2013 12:39 PM

ஒடிசாவில் பஞ்சாயத்து உறுப்பினர் கடத்திக் கொலை

ஒடிசா மாநிலம் மால்கன்கிரி மாவட்டத்தில் இருந்து மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்ட கிராமத்தினர் 7 பேரில் பஞ்சாயத்து உறுப்பினர் உள்பட 2 பேரை அவர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர்.

அவர்களின் உடல்கள் பேஜங்வாடா வனப் பகுதியில் இன்று காலை கண்டெடுக்கப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அகிலேஷ்வர் சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 12) சிந்தன்வாடா, ராமகுடா கிராமத்துக்குள் புகுந்த மாவோயிஸ்டுள் அங்கிருந்து கிராமத்தினர் 7 பேரை கடத்திச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x