Published : 28 Oct 2015 09:43 AM
Last Updated : 28 Oct 2015 09:43 AM
திருப்பதியில் 7 ஏக்கரில் ரூ.100 கோடி செலவில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையை நிறுவ திருமலை-திருப்பதி தேவஸ் தானம் நேற்று ஒப்புதல் வழங் கியது.
திருமலை திருப்பதி தேவஸ் தான அறங்காவலர் குழு கூட்டம் திருமலையில் நேற்று நடை பெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு அறங்காவலர் குழு தலைவர் சதலவாடா கிருஷ்ண மூர்த்தி கூறியதாவது: திருப்பதியில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தை மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை நிர்வாகத்துக்கு வாடகைக்கு தர தேவஸ்தான அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
ஒரு ஏக்கர் நிலத்துக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வீதம் வாடகை வசூலிக்கப்படும். இந்த மருத்துவமனை ரூ.100 கோடியில் கட்டப்பட்டும். மேலும் ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் ரூ.3.5 கோடி செலவில் வெங்கடேச பெருமாள் மற்றும் விநாயகர் கோயில் கட்டப்படும். இ டெண்டர் மூலம் ரூ.1.54 கோடியில் 19,000 கிலோ மிளகு, ரூ.2.43 கோடிக்கு 27,000 கிலோ ஏலக்காய், ரூ.12 கோடியில் 41.43 லட்சம் லிட்டர் பால் வாங்கவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய் யப்பட்டது, என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT