Published : 26 Sep 2016 12:46 PM
Last Updated : 26 Sep 2016 12:46 PM
பிஎஸ்எல்வி சி-35 ராக்கெட்டை 8 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக ஏவிய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விஞ்ஞானிகளுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இத்தருணம் பெருமகிழ்ச்சி மற்றும் பெருமையைத் தருகிறது. நம் விஞ்ஞானிகள் தொடர்ந்து வரலாறு படைத்து வருகின்றனர். கண்டுபிடிப்பில் அவர்களின் பேரார்வம், 125 கோடி இந்தியர்களின் மனதைத் தொட்டிருக்கிறது. இந்தியாவை உலக அளவில் பெருமை கொள்ளச் செய்திருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 8 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி35 ராக்கெட் திங்கள்கிழமை காலை 9.12 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
பிஎஸ்எல்வி - சி35 ராக்கெட்டில், 371 கிலோ எடையுள்ள 'ஸ்காட்சாட்-1' என்ற செயற்கைக்கோள் பருவநிலை தொடர்பான ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. வானிலை முன்னறிவிப்பு குறித்த தகவல்களை இந்த செயற்கைக்கோள் மூலம் பெற இயலும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT