Published : 20 Jun 2016 09:09 AM
Last Updated : 20 Jun 2016 09:09 AM

ரகுராம் ராஜன் காங்கிரஸ் ஏஜென்ட்: சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டு

காங்கிரஸ் ஆட்சியின்போது 2013-ம் ஆண்டில் ரிசர்வ் வங்கி ஆளுநராக ரகுராம் ராஜன் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக் காலம் செப்டம்பர் 4-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

ஆர்பிஐ தொடர்பான ரகசிய தகவல்களை வெளிநாடுகளுக்கு அனுப்புகிறார். வட்டி விகிதத்தை குறைக்காமல் பொருளாதாரத்தை சீர்குலைக்கிறார், அவர் மனதளவில் இந்தியர் இல்லை என்று ரகுராம் ராஜன் மீது பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம் சுமத்தினார்.

இந்நிலையில் 2-வது முறையாக ஆர்பிஐ கவர்னராக நீடிக்க விரும்ப வில்லை என்று ரகுராம் ராஜன் அறி வித்துள்ளார். இதுகுறித்து சுப்பிர மணியன் சுவாமி கூறும்போது, “மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப் புக்கு வந்த பிறகு ரகுராம் ராஜன் காங்கிரஸின் ஏஜெண்டாக செயல் படத் தொடங்கினார். எனது கூற்று இப்போது நிரூபணமாகியுள்ளது. உண்மைகளை ரகுராம் ராஜன் மறைக்கிறார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x