Published : 08 Aug 2016 09:56 AM
Last Updated : 08 Aug 2016 09:56 AM
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலை நன்கு தேறி வருகிறது. முன்பை விட நேற்று கூடுதலான உடற்பயிற்சிகளை செய்தார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு சட்டப்பேரவை தேர்தல் வருவதை யொட்டி, பிரதமர் மோடிக்கு சவால் விடுக்கும் வகையில் அவரது சொந்த தொகுதியான வாரணாசியில் இருந்து காங்கிரஸ் தலைவர் சோனியா கடந்த வாரம் தேர்தல் பிரச்சாரம் தொடங்கினார்.
அப்போது திடீரென அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், பிரச்சார நிகழ்ச்சிகளை பாதியிலேயே ரத்து செய்து விட்டு, உடனடியாக டெல்லி திரும்பினார்.
அங்குள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் மேல் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவரது இடதுதோள் பட்டையில் பிரச்சினை ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவருக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவரது உடல்நிலை நன்கு தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் எழுந்து நடப்பது, உடற் பயிற்சி செய்வது என முன்பை விட அவர் சுறுசுறுப்பாக செயல் படுவதாகவும், உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT