Published : 16 Mar 2017 11:33 AM
Last Updated : 16 Mar 2017 11:33 AM
பஞ்சாப் மாநில முதல்வராக காங்கிரஸின் அமரிந்தர் சிங் பதவி ஏற்றுக் கொண்டார்.
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 77 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. புதிதாக தேர்ந்தெடுக் கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க் களின் கூட்டம் சண்டிகரில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக அமரிந்தர் சிங் தேர்வு செய்யப் பட்டார். இதைத் தொடர்ந்து அவர் ஆளுநர் வி.பி.சிங் பட்னோரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இதனையடுத்து பஞ்சாபின் 26-வது முதல்வர் அமரிந்தர் சிங் இன்று (வியாழக்கிழமை) பதவி ஏற்றார்.
அமரிந்தர் சிங்குடன், முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்ட பிற அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர்.
இப்பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸின் முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பஞ்சாபில் 117 தொகுதிகளில் காங்கிரஸ் 77 தொகுதிகளைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையை பெற்றது. அகாலிதளம் 15, பாஜக 3 இடங்களில் வெற்றி பெற்றன. ஆம் ஆத்மி கட்சி 20 தொகுதிகளைக் கைப்பற்றியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT