Published : 14 Jan 2017 05:58 PM
Last Updated : 14 Jan 2017 05:58 PM

முன்னாள் தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா மறைவு

தமிழகத்தின் முன்னாள் ஆளுநராக இருந்த சுர்ஜித் சிங் பர்னாலா சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 91. நீண்டகாலமாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்றுவந்த பர்னாலா, சண்டிகர் பிஜிஐ மருத்துவமனையில் காலமானார்.

1925ஆம் ஆண்டு ஹரியானாவின் அடேலியில் பிறந்தவர் பர்னாலா. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். 1952ஆம் ஆண்டு அரசியலில் போட்டியிட்டவர்.

பஞ்சாபின் முதலமைச்சராகவும், உத்தராகண்ட், ஆந்திரம், அந்தமான் ஆகிய மாநிலங்களுக்கு ஆளுநராகவும், இரண்டு முறை தமிழகத்தின் ஆளுநராகவும் செயல்பட்டவர். வாஜ்பாய் ஆட்சியின் போது அவரது அமைச்சரவையில் பங்குபெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x