Last Updated : 01 Oct, 2014 09:18 AM

 

Published : 01 Oct 2014 09:18 AM
Last Updated : 01 Oct 2014 09:18 AM

வருங்கால வைப்பு நிதி பயனாளிகளுக்கு ரூ. 1000 ஓய்வூதியம் திட்டம் தொடக்கம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் சந்தா தாரர்களாக இருந்து ஓய்வூதியம் பெறுவோருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையாக ரூ. 1000 அளிக்கும் திட்டம் செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தை உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் மத்திய உள்துறை ராஜ்நாத் சிங், கொல்கத்தாவில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், குவாலியரில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடங்கிவைத்தனர்.

வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் சேரும் தொழிலாளர் களுக்கு, அவர்கள் 58 வயது பூர்த்தியடைந்தப் பிறகு ஓய்வூதி யம் வழங்கும் திட்டம் செயல் படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஏராளமானோர் ரூ. 1000-க்கும் குறைவான ஓய்வூதியத்தை பெற்று வருகின்றனர்.

இவர்களின் ஓய்வூதியத்தை உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி, குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையாக ரூ. 1000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய அறிவிப்பின்படி சுமார் 32 லட்சம் பேர் பயனடைய உள்ளனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x