Published : 30 Nov 2013 08:45 AM
Last Updated : 30 Nov 2013 08:45 AM

தெலங்கானா விவகாரம்: டிச. 3ல் சிறப்பு கேபினட் கூட்டம்

தெலங்கானா விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் டிசம்பர் 3ம் தேதி நடைபெறும் என்று உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறினார்.

இதுகுறித்து அவர் டெல்லியில் நேற்று கூறியதாவது: மத்திய அமைச்சரவை கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. தெலங்கானா விவகாரம் மட்டுமே இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. தெலங்கானா தனி மாநிலம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் குழுவின் அறிக்கை மீதும் தெலங்கானா வரைவு மசோதா குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும். தெலங்கானா உருவாக்குவது தொடர்பாக பல்வேறு சாத்தியக்கூறுகள் முன்வைக்கப்பட்டு, இதில் மத்திய அமைச்சரவை இறுதி முடிவு எடுக்கும் என்றார் ஷிண்டே.

இதனிடையே தெலங்கானா விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர்கள் குழுவின் இறுதிக் கூட்டம், கேபினட் கூட்டத்துக்கு முதல் நாள் அல்லது கேபினட் கூட்டத்தன்று காலை நடைபெறும் என்று கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் ஆந்திரப்பிரதேச மறுசீரமைப்பு வரைவு மசோதா இறுதி செய்யப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x