Published : 16 Oct 2014 12:31 PM
Last Updated : 16 Oct 2014 12:31 PM
மேற்கு வங்கத்தில் மால்டா, முர்சிதாபாத் மாவட்டங்களில் வியாழக்கிழமை நடந்த வெவ்வேறு குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கடந்த 2-ம் தேதி மேற்குவங்கத்தின் புர்த்வான் மாவட்டத்தில் குண்டு வெடித்தது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு நிறுவனம் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் இன்று (வியாழக்கிழமை) மீண்டும் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
சம்பவம் குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், வீடுகளில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகளை அப்புறப்படுத்த முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது" இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT