Published : 24 Jun 2016 07:35 AM
Last Updated : 24 Jun 2016 07:35 AM
பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் கொலை வழக்கு விசாரணை தகவல்கள் கசிவது தொடர்பாக சிபிஐ-க்கு மும்பை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர், கம்யூனிஸ தலைவரும் சமூக செயற்பாட் டாளருமான கோவிந்த் பன்சாரே ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது.
ஆனால் விசாரணை குறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளி யாகி பரபரப்பை ஏற்படுத்தி வரு கின்றன. இதையடுத்து இந்த இருவரின் கொலை வழக்கு விசா ரணையை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என அவர்களின் குடும்பத் தினர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதிகள், எஸ்.சி. தர்மாதிகாரி, ஷாலினி பன்சல்கர் ஜோஷி ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “தபோல்கர் கொலை வழக்கில் சாட்சியம் அளிக்கப்போவது யார், சிபிஐ எங்கெல்லாம் தேடுதல் வேட்டை நடத்தப்போகிறது என்பதெல்லாம் எப்படி ஊடகங் களுக்கு தெரிகிறது? விசாரணை யில் வெளிவரும் ஒவ்வொரு தகவலும் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இதே ரீதியில் விசாரணை நடத்தினால் தகவல் கசியவிடும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வும் மற்றும் சிறைக்கு அனுப்பவும் தயங்க மாட்டோம்” என்று நீதிபதி கள் எச்சரித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT