Published : 07 Jul 2016 10:44 AM
Last Updated : 07 Jul 2016 10:44 AM
டெல்லியில் தாக்குதல் நடத்த திட்ட மிட்டதாக கைது செய்யப்பட்டுள்ள ஜெய்ஷ்-இ-முகம்மது (ஜே.இ.எம்) தீவிரவாதிகள் 3 பேரின் காவலை வரும் 25-ம் தேதி வரை டெல்லி நீதிமன்றம் நேற்று நீட்டித்தது.
முகம்மது சஜித், ஷாகிர், சமீர் என்கிற இந்த மூவரும் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அரசுத் தரப்பு கோரிக்கையை ஏற்று இந்த மூவரின் நீதிமன்ற காவலை வரும் 25-ம் தேதி வரை நீட்டிக்க நீதிபதி ரீதேஷ் சிங் ஒப்புதல் அளித்தார்.
டெல்லி தாக்குதல் திட்டத்தை முழுமையாக அறிய இவர்களிடம் விசாரிப்பது அவசியம் என்ற அரசுத் தரப்பின் கோரிக்கையை ஏற்று, அவர்களை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் ஏற்கெனவே அனுமதி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT