Published : 15 Nov 2013 09:44 AM
Last Updated : 15 Nov 2013 09:44 AM

மகாராஷ்டிராவில் ரயில் தடம் புரண்டு விபத்து: 2 பேர் பலி

மகாராஷ்டிரம் மாநிலம் நாசிக் மாவட்டம் இகாத்புரி அருகே எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. இதில், 2 பேர் பலியாகினர் 37 பேர் கயமடைந்தனர்.

இன்று அதிகாலை, 6.20 மணியளவில் நிசாமுதீன் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண்-12618) கோதி-இகாத்புரி நிலையங்களுக்கு இடையே வந்த போது ரயில் பெட்டிகள் தீடீரென தடம் புரண்டது. 10 பெட்டிகள் தடம் புரண்டன. இதில், 2 பயணிகள் பலியாகினர். விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரயில் விபத்து காரணமாக மன்மாட்-குர்லா-கோதவரி எக்ஸ்பிரஸ், மன்மாட்-மும்பை பஞ்சாவதி எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x