Published : 30 May 2017 08:34 PM
Last Updated : 30 May 2017 08:34 PM
இந்திய ராணுவம் எந்நேரமும் விழிப்புடன் உள்ளது. எதற்கும் தயாராக உள்ளது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். இதன்மூலம் பாகிஸ்தானுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் சிறந்து விளங்கும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ரக்சா மந்திரி விருது விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் அமைச்சர் அருண் ஜேட்லி பேசியதாவது:
இந்தியாவின் அண்டை நாடு (பாகிஸ்தான்) நமது பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அதற்காக அண்டை நாட்டை நாம் மாற்ற முடியாது. பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்திய ராணுவம் எந்நேரமும் விழிப்புடன் உள்ளது. எதற்கும் தயாராக உள்ளது.
தற்போது வெளிநாடுகளில் இருந்து அதிகமாக ஆயுதங்களை கொள்முதல் செய்து வருகிறோம். இனிவரும் காலங்களில் இறக்குமதி குறைக்கப்படும். உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கப்படும். பாதுகாப்புத் துறையில் பொதுத்துறை நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் ஆரோக்கியமான போட்டியை எதிர்கொள்ள வேண்டும்.
நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. எனினும் கடந்த 3 ஆண்டுகளில்தான் அபரிதமான பொருளாதார வளர்ச்சி அடைந்து வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT