Published : 28 Mar 2014 01:11 PM
Last Updated : 28 Mar 2014 01:11 PM

பிருத்வி-2 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

அணுஆயுதம் தாங்கிச் சென்று இலக்கை தாக்கும் சக்தி கொண்ட பிருத்வி-2 ஏவுகணை, ஒடிசா மாநிலம் சந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

500 கிலோ எடையிலான அணு ஆயுதத்தை சுமந்து சென்று 350 கி.மீ., வரையிலான தொலைவில் இருக்கும் இலக்கை குறி வைத்து தாக்கும் சக்தி வாய்ந்தது பிருத்வி 2 ஏவுகணை.

இன்றைய சோதனையின் போது பிருத்வி-2 ஏவுகணை திட்டமிட்டபடி, இலக்கை சரியாக தாக்கியதாக சந்திப்பூர் ஏவுகணை ஏவுதள மைய இயக்குநர் எம்.வி.கே.வி. பிரசாத் தெரிவித்துள்ளார்.

கடைசியாக பிருத்வி-2 ரக ஏவுகணை, ஜனவரி 7-ஆம் தேதி சோதிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதியும், ஆகஸ்ட் 12-ம் தேதியும் சோதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x