Last Updated : 18 Jun, 2016 09:01 AM

 

Published : 18 Jun 2016 09:01 AM
Last Updated : 18 Jun 2016 09:01 AM

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் 22 வார கர்ப்பத்தை கலைக்க குஜராத் உயர் நீதிமன்றம் அனுமதி

குஜராத்தில் பாலியல் வன்கொடு மைக்கு ஆளான 14 வயது சிறுமி யின் 22 வார கர்ப்பத்தை முடிவுக்கு கொண்டுவர அம்மாநில உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் பகுதியை சேர்ந்த இச்சிறுமி தனக்கு ஏற்கெனவே அறிமுகமான 21 வயது இளைஞர் ஒருவரால் பாலியல் வன் கொடுமைக்கு ஆளானார். இது அவர் கர்ப்பம் அடைந்த பிறகே அவரது பெற்றோருக்கு தெரியவந் துள்ளது. இதையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ராஜ்கோட் மகளிர் காவல் நிலைய போலீஸார் கடந்த 4 மே 22-ம் தேதி வழக்கு பதிவு செய்து, சம்பந்தப்பட்ட இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனிடையே போதிய சத்துக் கள் இல்லாமலும், ரத்தசோகையா லும் சிறுமி பாதிக்கப்பட்டார். அவரது கர்ப்பத்தை முடிவுக்கு கொண்டுவர, ராஜ்கோட் நீதிமன்றத்தின் அனு மதியை பெற்றோர் கோரினர். மெடிக்கல் டெர்மினேஷன் ஆப் பிரக்னன்சி (எம்.டி.பி) சட்டப்படி 20 வாரங்களுக்குள் மட்டுமே கர்ப்பத்தை முடிவுக்கு கொண்டுவர முடியும். இதனால் ராஜ்கோட் நீதி மன்றம் அனுமதி அளிக்கவில்லை.

இதையடுத்து பெற்றோர் குஜராத் உயர் நீதிமன்றத்தை நாடினர். இந்நிலையில் சிறுமியின் 22 வார கர்ப்பத்தை முடிவுக்கு கொண்டுவர உயர் நீதிமன்றம் கடந்த வாரம் அனுமதி அளித்தது.

இதுகுறித்து நீதிபதி சோனியா கோகனி பிறப்பித்த உத்தரவில், “பாதிக்கப்பட்ட சிறுமி கர்ப்ப காலத்தை நிறைவு செய்வதற்கான சாத்தியக்கூறு குறித்த மருத்துவ அறிக்கை மற்றும் அச்சிறுமியின் சமூக சூழ்நிலை ஆகியவற்றை நீதி மன்றம் கவனமாக ஆராய்ந்தது. இதில் சிறுமியின் கர்ப்பத்தை முடி வுக்கு கொண்டு வருவது அவசியம் என நீதிமன்றம் முடிவுக்கு வந்துள் ளது. இதுவே சிறுமியின் நலனுக் கான சிறந்த தீர்வாக இருக்கும்.

சிறுமியின் உடல்நிலையை கருத் தில் கொண்டு அவரை மருத்துவக் குழுவினர் மீண்டும் ஒருமுறை பரிசோதித்து அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x