Published : 10 Oct 2014 02:03 PM
Last Updated : 10 Oct 2014 02:03 PM
ஹுத்ஹுத் புயல் முன்னேற்பாடுகளை மத்திய அரசு கூர்ந்து கவனித்து வருவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஏற்பட்ட காற்றழுத்தம் புதன்கிழமை புயலாக மாறியது. ஒடிஸாவின் கோபால்பூருக்கு கிழக்கே 790 கி.மீ. தொலைவில் நேற்று மையம் கொண்டிருந்த இந்த புயல், கோபால்பூருக்கும் ஆந்திராவின் விசாகப்பட்டினத்துக்கும் இடையே 12-ம் தேதி கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, ஒடிஸா, ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் நாளை முதல் பலத்த மழையுடன் காற்று வீசும். புயல் கரையைக் கடக்கும்போது மிக பலத்த மழையும் கடும் புயல் காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,ஹுத்ஹுத் புயல் முன்னேற்பாடுகளை மத்திய அரசு கூர்ந்து கவனித்து வருவதாக தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங், ஒடிசா, ஆந்திரம், தெலங்கானா முதல்வர்களுடன் ஹுத்ஹுத் புயலை எதிர்கொள்ள செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து விரிவாக கேட்டறிந்ததாக தெரிவித்தார். மேலும், மூன்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக உத்திரவாதம் அளித்ததாகவும் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT