Published : 31 Dec 2014 03:39 PM
Last Updated : 31 Dec 2014 03:39 PM
அமீர் கான் நடிப்பில் வெளியாகியுள்ள பிகே திரைப்படத்தை மகாராஷ்டிர மாநில திரையரங்குகளில் தொடர்ந்து திரையிட எவ்வித தடையும் இல்லை என அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் தெரிவித்துள்ளார்.
பிகே படத்தில், இந்து மத கடவுளை விமர்சித்து காட்சிகள் இருப்பதாகக் கூறி அப்படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து மகாராஷ்டிராவில் இந்து அமைப்புகள் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
இதனையடுத்து, பிகே படம் குறித்து விசாரணை நடத்தப்படும் என மகாராஷ்டிரா உள்துறை ராம் ஷிண்டே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிகே திரைப்படம் மீதான விசாரணையை ரத்து செய்துள்ள முதல்வர் பட்நவிஸ், படம் குறித்து விசாரணை நடத்த தேவையில்லை. படத்தை தொடர்ந்து திரையிட எவ்வித தடையும் இல்லை. மகாராஷ்டிரா மாநிலத்தில், பிகே படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க அரசு தயாராக இருக்கிறது என கூறியுள்ளார்.
பிகே படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக, அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக படத்தின் இயக்குநர் ராஜ்குமார் ஹிராணி, யாரது மனதையும் புண்படுத்தும் நோக்கத்துடன் இப்படம் எடுக்கப்படவில்லை. மதத்தின் பெயரால் மேற்கொள்ளப்படும் மூடநம்பிக்கைகளை மட்டுமே படம் சாடுகிறது என விளக்கமளித்திருந்தார்.
இதற்கிடையில் சென்சார் வாரியத் தலைவர் லீலா சாம்சனும் பிகே படத்திலிருந்து எந்த ஒரு காட்சியையும் நீக்கும் பேச்சுக்கே வாய்ப்பில்லை என கூறியிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT