Published : 11 Nov 2013 11:50 AM
Last Updated : 11 Nov 2013 11:50 AM

பிகாரில் மாவோயிஸ்டுகள் அட்டகாசம்: 3 பேர் கொலை

பிகார் மாநிலம் கயா மாவட்டத்தில் நேற்று இரவு மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் கிராமவாசிகள் 3 பேர் பலியாகினர்.

இது தாக்குதல் குறித்து கயா மாவட்ட போலீஸ் உயர் அதிகாரி ராஜேஸ்குமார் கூறுகையில்: கயா மாவட்டத்தில் அம்கோலா எனும் கிராமத்துக்குள் நேற்றிரவு ஒரு கலை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது உள் புகுந்த மாவோயிஸ்டுகள் 7 பேரை மட்டும் கடத்திச் சென்றனர்.

பின்னர் அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், 4 பேர் படுகாயங்களுடன் அணுராக் நாராயண் மகத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

உயிரிழந்தவர்களில் சஞ்சய் யாதவ் என்ற நபர் மாவோயிஸ்டு இயக்கத்தில் இருந்து அண்மையில் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x