Last Updated : 02 Mar, 2017 08:17 AM

 

Published : 02 Mar 2017 08:17 AM
Last Updated : 02 Mar 2017 08:17 AM

500, 1000 பழைய ரூபாய் நோட்டு வைத்திருப்போருக்கு அபராதம்: சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை 10-க்கு மேல் வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித் துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி திடீரென அறிவித்தார். இதையடுத்து, இது தொடர்பான ஒரு சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி, செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை 10-க்கு மேல் வைத்திருப்பது சட்டப்படி குற்றம் ஆகும். அவ்வாறு வைத்திருப்பது தெரியவந்தால் ரூ.10 ஆயிரம் அல்லது கையிருப்பில் உள்ள தொகையைப் போல 5 மடங்கு இதில் எது அதிகமோ அந்த தொகையை அபராதமாக செலுத்த நேரிடும். எனினும், ஆய்வு நோக்கத்துக்காக 25 நோட்டுகள் வரை வைத்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு கடந்த பிப்ரவரி 27-ம் தேதி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கினார். இதை யடுத்து இந்த மசோதா சட்டமாகி அமலுக்கு வந்துள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x