Published : 02 Mar 2017 08:17 AM
Last Updated : 02 Mar 2017 08:17 AM
செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை 10-க்கு மேல் வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித் துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி திடீரென அறிவித்தார். இதையடுத்து, இது தொடர்பான ஒரு சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை 10-க்கு மேல் வைத்திருப்பது சட்டப்படி குற்றம் ஆகும். அவ்வாறு வைத்திருப்பது தெரியவந்தால் ரூ.10 ஆயிரம் அல்லது கையிருப்பில் உள்ள தொகையைப் போல 5 மடங்கு இதில் எது அதிகமோ அந்த தொகையை அபராதமாக செலுத்த நேரிடும். எனினும், ஆய்வு நோக்கத்துக்காக 25 நோட்டுகள் வரை வைத்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவுக்கு கடந்த பிப்ரவரி 27-ம் தேதி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கினார். இதை யடுத்து இந்த மசோதா சட்டமாகி அமலுக்கு வந்துள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT