Published : 29 Oct 2014 12:23 PM
Last Updated : 29 Oct 2014 12:23 PM
டெல்லியில் புதிய ஆட்சியை ஏற்படுத்துவது தொடர்பாக துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் அரசியல் கட்சிகளுடம் ஆலோசனை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக துணை நிலை ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டது.
பிப்ரவரி 16-ல் டெல்லி முதல்வர் பதவியை ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்ததில் இருந்து அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது.
டெல்லியில் ஆட்சி அமைக்க பாஜகவை அழைக்கலாம் என துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் அளித்த பரிந்துரைக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்நிலையில், அடுத்த சில நாட்களில், அரசியல் கட்சிகளுடன் நஜீப் ஜங் நடத்தவுள்ள ஆலோசனை முக்கியத்துவம் வாய்நததாக கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT