Published : 08 May 2017 08:41 AM
Last Updated : 08 May 2017 08:41 AM
டெல்லி ஆம் ஆத்மி அரசில் தண்ணீர், சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சராக இருந்தவர் கபில் மிஸ்ரா. இவர் நேற்று முன் தினம் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், கபில் மிஸ்ரா நேற்று செய்தியாளர் களைச் சந்தித்து முதல்வர் கேஜ்ரிவால், சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகள் சுமத்தினார். இதுகுறித்து கபில் மிஸ்ரா கூறியதாவது:
முதல்வரின் அரசு இல்லத்தில், அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ரொக்கமாக ரூ.2 கோடியை கேஜ்ரி வாலிடம் வழங்கினார். அந்த பணம் எங்கிருந்து வந்தது என்று நான் கேட்டேன். அதற்கு, ‘அரசியலில் சில விஷயங்கள் நடக்கும். எல்லா வற்றுக்கும் விளக்கம் சொல்ல முடி யாது’ என்று கேஜ்ரிவால் கூறினார்.
ஆனால், ‘கேஜ்ரிவாலின் உறவி னர் ஒருவருக்கு ரூ.50 கோடிக்கு நிலபேரம் முடித்துக் கொடுத்தேன்’ என்று அமைச்சர் சத்யேந்திர ஜெயின் என்னிடம் கூறினார். இதுகுறித்து நான் கேஜ்ரிவாலிடம் வாக்குவாதம் செய்ததால், என்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டனர்.
இவ்வளவு நாட்களும் கேஜ்ரி வால் மீது முழு நம்பிக்கை வைத்து அமைதியாக இருந்தேன். 2 நாட்களுக்கு முன்னர்தான் கேஜ்ரி வாலிடம் சத்யேந்திர ஜெயின் ரூ.2 கோடி கொடுப்பதை பார்த்தேன். அதை பார்த்த பிறகுதான் நான் வெளியேறினேன். இதுகுறித்த விவரங்களை ஆளுநர் அனில் பைஜாலிடம் சமர்ப்பித்துள்ளேன்.
மேலும், ரூ.2 கோடி விவகாரம் குறித்து சிபிஐ அல்லது ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் முன் னிலையில் வாக்குமூலம் அளிக் கவும் தயாராக இருக்கிறேன். மேலும் ஆம் ஆத்மியில் உள்ள சில தலைவர்களின் ஊழல்களை அம்பலப்படுத்துவேன்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா கூறினார்.
கேஜ்ரிவாலுக்கு ஆதரவு
ஊழல் புகார் குறித்து ஆம் ஆத்மி மூத்த தலைவர் குமார் விஷ்வாஸ் கூறும்போது, ‘‘கேஜ்ரிவால் லஞ்சம் வாங்குவார் என்பதை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அவரது எதிரிகளாலும் அவ்வாறு சிந்திக்க முடியாது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக எந்த வொரு விசாரணைக்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT