Published : 28 Jan 2014 09:30 AM
Last Updated : 28 Jan 2014 09:30 AM

மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட 4 பேர் மீட்பு: தேடுதல் வேட்டையில் சிஆர்பிஎப் வீரர் பலி

ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டத்தில் மாவோயிஸ்டு களால் கடத்தப்பட்ட 4 பேரை பாதுகாப்புப் படையினர் திங்கள்கிழமை மீட்டனர். தேடுதல் வேட்டையின்போது மாவோயிஸ் டுகள் நடத்திய தொடர் நிலக் கண்ணி வெடி தாக்குதலில் ஒரு சிஆர்பிஎப் வீரர் கொல்லப்பட்டார். 15 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து கிரிதி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கிரந்தி குமார் கூறுகையில், "தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. மேலும் தொடர்ச்சியாக நிலக் கண்ணி வெடிகள் மூலமும் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து கடத்தப்பட்ட 4 பேரை விட்டுவிட்டு அவர்கள் ஓடி விட்டனர்" என்றார்.

இந்தத் தாக்குதலில், பணியில் ஈடுபட்டிருந்த பாதல் ராய் என்ற வீரர் உயிரிழந்ததாகவும் 11 சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் ஜார்க்கண்ட் மாநில மாவோயிஸ்ட் எதிர்ப்புப் (ஜாகுவார்) படையைச் சேர்ந்த 4 பேர் காயமடைந்ததாகவும் சிஆர்பிஎப் தெரிவித்துள்ளது.

இதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ள தாகவும், சிஆர்பிஎப் துணை ஆய்வாளர் ஒருவரின் கால் துண்டிக் கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x