Published : 18 Jun 2017 10:35 AM
Last Updated : 18 Jun 2017 10:35 AM

ம.பி.யில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை

மத்திய பிரதேசத்தில் கடன் தொல்லை காரணமாக மேலும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

பல கோரிக்கைகளை வலி யுறுத்தி மத்திய பிரதேச விவசாயி கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த 6-ம் தேதி மான்ட்சர் பகுதியில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 விவசாயிகள் உயிரிழந்தனர்.

இதனிடையே தார் மாவட்டம் ராம்புரா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெகதீஷ் மோரி (40) நேற்றுமுன்தினம் இரவு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். கடன்தொல்லை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக விவ சாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீரேந்திர சிங் மறுத்துள்ளார். மதுப் பழக்கம், குடும்பப் பிரச்சினை காரணமா கவே ஜெகதீஷ் தற்கொலை செய்து கொண்டார் என்று அவர் தெரிவித்துள்ளார். அந்த மாநிலத்தில் கடந்த 9 நாட்களில் மட்டும் 12 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x