Last Updated : 28 Oct, 2014 08:41 PM

 

Published : 28 Oct 2014 08:41 PM
Last Updated : 28 Oct 2014 08:41 PM

உட்கட்சித் தேர்தல் மூலம் கட்சிக்கு புத்துயிர்: ராகுல்

கட்சிக்கு புத்துயிரூட்டும் வாய்ப்பாக உட்கட்சித் தேர்தல் பயன்படுத்திக் கொள்ளப்படும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் காங்கிரஸ் தோல்விக்குப் பிறகு முதல்முறையாக கட்சியின் மூத்த தலைவர்களுடன் டெல்லியில் நேற்று ராகுல் ஆலோசனை நடத்தினார்.

அப்போது ராகுல் கூறும்போது, “கட்சியை வலிமைப்படுத்தும் வகையில் அதன் அமைப்புத் தேர்தல் சுந்திரமாகவும் வெளிப்படையாகவும் நடத்தப்பட வேண்டும். இதற்காக முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தலைமையிலான கட்சியின் மத்திய தேர்தல் அமைப்புக்கு முழு அதிகாரம் தரப்பட்டுள்ளது. இத்தேர்தலை கட்சிக்கு புத்துயிரூட்டும் வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வோம்” என்றார்.

தேர்தல்களில் காங்கிரஸ் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் நிலையில் கட்சி அமைப்பில் எதிர்காலத்தில் முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் ராகுல் இவ்வாறு கூறியுள்ளார்.

கட்சியின் மாநில விவகாரங்களை கவனிக்கும் பொதுச் செயலாளர்கள், மாநிலத் தலைவர்கள், தேர்தல் அமைப்பு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x