Published : 22 Jan 2017 12:39 PM
Last Updated : 22 Jan 2017 12:39 PM
குஜராத் மாநிலம், ராஜ்காட் மாவட்டம், காக்வாட் நகரில் புதிதாக அம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளது. அந்த கோவிலில் நேற்று அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின்போது 3.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேசிய கீதத்தை பாடி புதிய உலக சாதனை படைத்தனர்.
இதற்கு முன்பு கடந்த 2014-ம் ஆண்டில் வங்கதேசத்தில் 2.54 லட்சம் பேர் சேர்ந்து அந்த நாட்டு தேசிய கீதத்தை பாடியது உலக சாதனையாக இருந்தது. அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. குஜராத் தேசிய கீத சாதனை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT