Published : 11 Dec 2013 09:35 AM
Last Updated : 11 Dec 2013 09:35 AM

மைசூர் மகாராஜா காலமானார்

மைசூர் கடைசி மகாராஜா ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நண்பகலில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 60.

மைசூரின் கடைசி மகாராஜா  கண்டதத்த உடையார் பெங்களூரில் உள்ள அவரது அரண்மனையிலும்,மைசூரில் உள்ள அவரது அரச இல்லத்திலும் மனைவி மகாராணி பிரமோத தேவியுடன் வசித்து வந்தார். செவ்வாய்க்கிழமை காலை முதலே லேசான காய்ச்சலால் உடல்நலக்குறைவுடன் இருந்தார். நண்பகல் 1 மணி அளவில் உணவு அருந்திய சிறிது நேரத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். மறைந்த மகாராஜாவுக்கு ராஜமரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்த கர்நாடக‌ அரசு முடிவெடுத்துள்ளது. கர்நாடகாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x