Published : 12 Jan 2014 11:30 AM
Last Updated : 12 Jan 2014 11:30 AM

இ.சி.ஆர். நாடுகளில் பணியாற்றும் இந்தியர்களுக்கு இன்சூரன்ஸ், பென்ஷன்

குடியேற்றத்துறை சோதனை தேவைப்படும் நாடுகளில் (இ.சி.ஆர்.) வேலை பார்க்கும் இந்திய தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் புதிய திட்டத்தின் கீழ் விரைவில் ஆயுள் காப்பீடு மற்றும் பென்ஷன் வழங்கப்பட உள்ளது.

டெல்லியில் நடைபெற்ற இ.சி.ஆர். நாடுகளின் இந்திய தூதரக அதிகாரிகளின் 8-வது வருடாந்திர மாநாட்டில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி பேசியதாவது:

மகாத்மா காந்தி ப்ரவசி சுரக்ஷா யோஜனா (எம்.ஜி.பி.எஸ்.ஒய்) திட்டம் ஐக்கிய அரபு நாட்டில் (யு.ஏ.இ.) நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. இத்திட்டம் விரைவில் பிற இ.சி.ஆர். நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

இ.சி.ஆர். நாடுகளில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் பெரும்பாலும், கட்டுமானம், சுகாதாரம் மற்றும் வீட்டுக்குரிய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x