Last Updated : 05 Oct, 2014 11:38 AM

 

Published : 05 Oct 2014 11:38 AM
Last Updated : 05 Oct 2014 11:38 AM

சிவசேனா ஆட்சிக்கு வந்தால் ஊழலை அம்பலப்படுத்தும்: தசரா விழாவில் உத்தவ் தாக்கரே பேச்சு

மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தால் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய அரசின் அனைத்து ஊழல்களையும் அம்பலப்படுத்துவோம் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மும்பையின் புறநகர் பகுதியான போரிவலியில் நடைபெற்ற தசரா விழாவில் பங்கேற்ற உத்தவ் தாக்கரே பேசியதாவது:

நீண்ட காலமாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி யினர் நல்ல நண்பர்களாக இருந்தனர். ஆனால் இப்போது இக்கட்சிகளுக்கிடையிலான கூட்டணி முறிந்துவிட்ட நிலையில் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறுகின்றனர்.

ஆதர்ஷ் குடியிருப்பு ஒதுக்கீடு தொடர்பாக முன்னாள் முதல்வர் சவாண் கையெழுத்திட்ட ஆவணங் களை ஆர்டிஐ சட்டத்தின் கீழ் கேட்டு பெறப் போவதாக ஒருவர் (அஜித் பவார்) கூறுகிறார். சொட்டு நீர்ப்பாசன ஊழல் வழக்கில் ஜெயலலிதாவைப் போல அவரையும் (அஜித் பவார்) சட்டம் தண்டிக்கும் என மற்றொருவர் (சவாண்) கூறுகிறார்.

ஆனால் இவர்கள் இருவரும் இதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. சிவசேனா ஆட்சிக்கு வந்தால், இவர்கள் செய்த ஊழல் தொடர்பான அனைத்து கோப்புகளையும் வெளியிட்டு உண்மை நிலையை மக்களுக்கு எடுத்துரைப்பேன். மேலும், சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேக்கு சர்வதேச தரத்தில் நினைவிடம் கட்டப்படும் என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x