Published : 16 Jun 2017 08:38 AM
Last Updated : 16 Jun 2017 08:38 AM
தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. ஜே.சி.திவாகர் ரெட்டி நேற்று காலை விசாகப்பட்டினத்தில் இருந்து ஐதராபாத் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், விமான நிலையத்துக்கு தாமதமாக வந்தார். அதனால் இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள், அவரை விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த எம்.பி. விமான ஊழியர்களை தள்ளிவிட்டு அமளியில் ஈடுபட்டுள்ளார்.
கடைசியில் விமானத்தில் செல்ல திவாகர் ரெட்டியை இண்டிகோ நிறுவனம் அனுமதித்தது. எனினும் இனி தனது நிறுவன விமானத்தில் செல்ல திவாகருக்கு அந்நிறுவனம் தடை விதித்தது. இதேபோல் ஸ்பைஸ் ஜெட், ஏர் இந்தியா விமானங்களும் அவருக்கு தடை விதித்தன.
எம்.பி. திவாகர் இண்டிகோ நிறுவன ஊழியரை தள்ளிவிடும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன. கடந்த ஆண்டு விஜயவாடாவில் கன்னாவரம் விமான நிலையத்தில் எம்.பி. திவாகர் ரெட்டி விமானத்தை தவறவிட்டார். அப்போது ஏர் இந்தியா அலுவலகத்தில் தகராறில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT