Published : 21 Jul 2016 10:07 AM
Last Updated : 21 Jul 2016 10:07 AM

ஹைதராபாத்தில் 3 நாய் குட்டிகளை உயிருடன் எரித்த சிறுவர்கள்

ஹைதராபாத்தில் 3 நாய் குட்டி களை உயிருடன் தீயில் வீசி எரித்த வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஹைதராபாத் முஷீர்பாத் பகுதியில் கடந்த 16ம் தேதி 5 சிறுவர்கள் தெருவில் விறகுகளால் தீ மூட்டினர். பின்னர் அந்த தீயில் உயிருடன் இருக்கும் 3 நாய் குட்டிகளை வீசினர். இதில் 3 நாய் குட்டிகளும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தன. இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ காட்சி கள் அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியிடப் பட்டன.

இதைக் கண்டு விலங்குகள் நல ஆர்வலர்களும், பொதுமக்களும் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் உயிருடன் நாய் குட்டிகள் எரிக்கப்பட்ட விவ காரம் தொடர்பாக ‘ப்ளூ கிராஸ்’ அமைப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய் துள்ளனர். மேலும் சந்தேகத்தின் பேரில் 5 சிறுவர்களை பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x